நீர்யானை: 20 Interesting Facts about Hippos in Tamil
நீர்யானை பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
உலகத்தில் வாழக் கூடிய விலங்குகளில் இரண்டாவது பெரிய தரைவாழ் விலங்கு என்ற பெருமைக்குரியது நீர்யானை (Hippopotamus) தான். இவை கூட்டமாக வாழக்கூடிய தாவர உண்ணிகள் ஆகும். நீர்யானைப் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts About Hippopotamus in Tamil
நீர் யானை பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. ஆப்பிரிக்காவில் வாழக்கூடிய மிக பலமான மற்றும் ஆபத்தான விலங்குகளில் இதுவும் ஒன்று.
2. இந்த நீர்யானை அமைதியாக இருக்கும். தானாக சென்று யாரையும் தாக்காது. ஆனால் அவை வாழும் இடத்தினுள் யாரும் அத்துமீறி நுழைந்தால் அவை தாக்கும்.
3. நீர்யானை தங்கள் அதிக நேரத்தை நீரில் செலவிடுகிறது. தண்ணீரிலும் நிலத்திலும் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு வாழ்கின்றன.
4. அவை வாழக் கூடிய இடத்தின் எல்லைப் பகுதியை பாதுக்காத்துக் கொள்வது ஆண் நீர் யானையின் வேலை ஆகும்.
5. இவை கூட்டம் கூட்டமாக வாழக் கூடியவை. இந்த கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை இருக்கும்.
6. ஒரு நாளில் 16 முதல் 20 மணி நேரம் வரை ஓய்வு எடுக்கின்றன. இதனால் ஒரு மணி நேரத்தில் 20 கிலோ மீட்டர் வேகத்தில் நடக்க முடியும்.
7. இவை நீருக்கடியிலே குட்டிப் போடுகின்றன. இவை பிறக்கும் போது 45 கிலோ கிராம் எடையுள்ளதாக இருக்கின்றன.
8. ஆச்சரியமான உண்மை என்னவென்றால் நீர் யானைக்கு நீச்சல் தெரியாது. அவை நீருக்குள் நின்று கொண்டு தான் இருக்குமே தவிர நீந்தாது. இதன் பால் பிங்க் நிறத்தில் இருக்கும் என்பது வதந்தி. இதன் பால் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும்.
9. இவை பகல் முழுவதும் நீரில் இருந்தாலும் இரவில் அவைகளுக்குப் பிடித்த புல் வெளியில் தான் உறங்குகின்றன. அவ்வாறு உறங்கும் போது ஒரு நீர் யானை 45 கிலோ வரை புல்களைத் தின்னுமாம்.
10. இவை நீர் குதிரை என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றின் வாழ்நாள் 40 முதல் 50 ஆண்டு வரை ஆகும்.
11. இதன் உடல் எடை 1500 கிலோ முதல் 3200 கிலோ வரை இருக்கும். இதன் உடல் நீளம் 3.5 மீட்டர் வரை இருக்கும்.
12. ஆண் நீர்யானையை விட பெண் நீர்யானைக்கு உடல் எடை குறைவாக இருக்கும்.
13. நீர்யானையின் கூர்மையான பற்களை கொண்டு சாதாரண ஒரு படகை உடைத்து நொறுக்க முடியும். அந்த அளவிற்கு வலிமையானது இதன் பற்கள்.
14. உலகிலேயே மூன்றாவது பெரிய பாலூட்டி நீர் யானை தான். யானை மற்றும் வெள்ளை காண்டாமிருகங்களுக்குப் பிறகு.
15. ஐந்து நிமிடங்கள் வரை நீருக்கடியில் மூச்சை அடக்கிக் கொள்ளக் கூடியது இந்த நீர்யானை.
16. நீர்யானை பகலை விட இரவில் சுறுசுறுப்பாக இருக்கும். இதன் பேறுகாலம் 8 மாதங்கள் (243 நாட்கள்) ஆகும்.
Also, read: யானை: 20 Interesting Facts about Elephants in Tamil
17. சாகாரா போன்ற ஆப்பிரிக்க இடங்களில் வாழும் நீர்யானை சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தங்கள் உடலிலேயே சிவப்பான எண்ணெய் பசை போன்ற திரவத்தை உற்பத்தி செய்கிறது.
18. பெண் நீர்யானை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் இனப்பெருக்கம் செய்கின்றன.
19. இவை நீருக்கடியில் அதிகம் இருப்பதாகான காரணம் அதன் உடலை மிதமாக வைத்துக் கொள்வதற்காகத்தான். நீருக்கு அடியில் தான் இவை பாதுகாப்பாக உணருகின்றன.
20. நீர்யானை அதன் உடல் எடையில் 1 முதல் 1.5 % வரையிலான உணவுகளைத் தான் உண்கின்றன.
நீர்யானை பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Hippos in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com